தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா.. பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு.. ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் இன்று, 477 பேருக்கு புதிதாக, கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் 332 பேருக்கு இன்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேலும் 3 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்ததால், 71 என்ற நிலையிலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். எனவே, மொத்தம், 3538 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வெளி மாநிலங்கள்
இன்று மாலை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 384 பேருக்கும், பிற வெளிமாநிலங்களில் இருந்து வந்த 93 பேருக்கும் என மொத்தம் 477 பேருக்கு, பாதிப்பு பதிவாகியுள்ளது. அதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களுக்கு மட்டும் 81 பேருக்கு இன்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இன்று சுமார் 20 சதவீதம் அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது.

குறைகிறது
மற்றபடி, தமிழகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்தார். அதேநேரம் நல்ல விஷயம் என்னவென்றால் மூன்றாவது நாளாக தமிழகத்தின் மொத்த வைரஸ் பாதிப்பு தொடர்ச்சியாக 500க்கும் கீழே குறைந்துள்ளது. மே 11ஆம் தேதி 798 என்ற அளவுக்கு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில், படிப்படியாக அது குறைந்துள்ளது. சென்னையிலும் 11ம் தேதிதான் மிக அதிகமான பாதிப்பு பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குணமடைவோர் விகிதம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனா, வைரஸ் பாதிப்பால் குணமடைந்து ஒரே நாளில் இத்தனை பேர் வீடு திரும்பியது இதுதான் முதல் முறையாகும். இதை சுட்டிக் காட்டிய விஜயபாஸ்கர், இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலும், தமிழகத்தில் இறப்பு விகிதம் என்பது குறைவாக இருக்கிறது. சிகிச்சை பெற்று குணமடைந்தார் விகிதமும் அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம் என்று தெரிவித்தார்.

மீட்பு விகிதம்
அதாவது தமிழகத்தில், 0.69 சதவீதம் என்ற அளவில், கொரோனா இறப்பு விகிதம் உள்ளது. மீட்பு விகிதம், 33.4 சதவீதம் என்ற அளவுக்கு உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 31 நாட்களாக யாருக்கும் புதிதாக பாதிப்பு இல்லை. கோவை மாவட்டத்தில் 13 நாட்களுக்கு மேலாக, திருப்பூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்கு மேலாக, யாருக்கும் பாதிப்பு இல்லை.

சிறப்பு
சேலம், திருவாரூர் மாவட்டங்களில் தலா 10 நாட்கள், நாமக்கல், நீலகிரியில் தலா 7 நாட்கள், புதிதாக யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று அளித்த பேட்டியின்போது தெரிவித்தார். மொத்த பாதிப்பில், 69.5% சென்னையில் மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications