Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படுவேகமாக அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் 300ஐ தாண்டிய தினசரி பாதிப்பு.. வேகமாக பரவுவது ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை மூன்று முறை கொரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. வேக்சின், தடுப்பு பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து கட்டுக்குள் வந்தது.

 Tamilnadu Coronavirus latest updates daily cases of tamilnadu crosses 300

கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மிகக் குறைவாகவே பதிவாகி வந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு: இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனையையும் இன்று நடத்தினார். இதில் பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று தினசரி வைரஸ் பாதிப்பு 273ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் அது 300ஐ கடந்துள்ளது.

 Tamilnadu Coronavirus latest updates daily cases of tamilnadu crosses 300

159 ஆண்கள் மற்றும் 144 பெண்கள் என்று இன்று மாநிலம் முழுக்க மொத்தம் 303 பேருக்குத் தினசரி கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 101 பேருக்கும், செங்கல்பட்டில் 29 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல கன்னியாகுமரியில் 26 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்: பிரிட்டனில் இருந்து வந்த 3 பேருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10க்கு குறைவாக ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது நல்ல ஒரு செய்தியாகும். அதேபோல அதேபோல மாநிலத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 1500 தாண்டி 1530ஆக இப்போது உள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாகக் கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதேபோல இன்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், புதிய ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாகக் கூறியிருந்தார். அதேநேரம் இது முந்தைய வேரியண்ட்கள் அளவுக்கு வேகமாகப் பரவுவதில்லை என்பது ஒரு நல்ல செய்தியாகும்.

மாஸ்க்: இந்திய அளவில் கொரோனா பாதிப்பு படுவேகமாகவே அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடு முழுக்க மாஸ்க் அணிவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதில் மாஸ்குகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கவே செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+