அடடே அருமை.. தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை கிடுகிடு அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று 76, அதற்கு முன் தினம் 43 என்ற அளவில் புதிய நோயாளிகள் சேர்க்கை இருந்தது. இதையெல்லாம் வைத்து பார்த்தால், தமிழகத்தில், ஒரு அளவுக்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,629 என்ற அளவில் உள்ளது. அதே நேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை என்பது 662 ஆக உள்ளது.

அதாவது 40.63% நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதில் 18 பேர் மரணமடைந்துள்ளனர். இது 1.5 என்ற சதவீதத்தை விட குறைவாகும். தமிழக மருத்துவத் துறையின் சாதனை என்று இந்த விஷயம் தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பழங்கள், உள்ளிட்டவை பரிசாக வழங்கி சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டியலை சுகாதாரத்துறை இன்று வெளியிடவில்லை. நாளைய அறிக்கையில் தெரிவிப்பார்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications