4.32 லட்சம் பேரா!!.. கொரோனா வேக்சின் போடுவதில்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை.. எப்படி சாத்தியமானது?
சென்னை; தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 4.32 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேக்சின் போடுவதில் நேற்று புதிய சாதனை படைத்துள்ளது.
Recommended Video
நாடு முழுக்க வேக்சின் வழங்குவதை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. 18+ வயது கொண்ட எல்லோருக்கும் இலவசமாக மத்திய அரசு வேக்சின் வழங்குகிறது. மத்திய அரசு அளிக்கும் இந்த வேக்சினை மாநில அரசுகள் மக்களுக்கு அளிக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்வளவு என்று மத்திய அரசு தினமும் வேக்சின் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 2-4 லட்சம் வேக்சின் புனேவில் இருந்து டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.

எப்படி
தமிழ்நாட்டிற்கு தினசரி வழங்கப்படும் வேக்சின் உடனுக்குடன் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் வேக்சின் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்படுகிறது. சென்னை, கோவை மாவட்டங்களுக்கு அதிக அளவு வேக்சினும், மற்ற மாவட்டங்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் வேக்சினும் வழங்கப்படுகிறது.

மாவட்ட
இதற்காக மாவட்டங்களில் சிறு சிறு அளவில் கேம்ப்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு எளிதாக வேக்சின் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மக்களும் தற்போது வேக்சின் போட ஆர்வம் காட்டி வருவதால், வேக்சின் போடப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிகாலையிலேயே மக்கள் ஆர்வமாக வேக்சின் போட பல்வேறு மாவட்டங்களில் வரிசையில் நிற்கும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் நடந்து வருகின்றன.

எவ்வளவு
மக்கள் ஆர்வமாக இருப்பதாலும், பல உள்ளூர் கேம்ப்கள் அமைக்கப்பட்டு இருப்பதாலும் வேக்சின் போடுவதும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 4,32,044 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் மிக அதிக நபர்களுக்கு போடப்பட்ட வேக்சின் ரெக்கார்ட் இதுதான். இதற்கு முன் தினசரி வேக்சின் 4 லட்சத்தை தாண்டாத நிலையில் நேற்று 4.32 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

எவ்வளவு
இதுவரை தமிழ்நாட்டில் 1,32,59,228 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 18+ வயது கொண்டவர்களில் 20.2% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 45 + வயது கொண்டவர்களில் 25.1% பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 60+ வயது கொண்டவர்களில் 23.4 % பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுள்ளது. 4.1% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications