சென்னையில் மட்டும் 2008 பேர் பாதிப்பு.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 508 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட மாவட்ட வாரியான பட்டியல் இதோ, பாருங்கள்: செங்கல்பட்டு 38, சென்னை 279, கடலூர் 68, தர்மபுரி 1, திண்டுக்கல் 7, கள்ளகுறிச்சி 38, காஞ்சிபுரம் 1 பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி 2, மதுரை 1, நாமக்கல் 15, நீலகிரி 4, பெரம்பலூர் 1, சேலம் மற்றும் தென்காசி தலா 1, தேனி 5, திருவள்ளூர் 18, திருநெல்வேலி மற்றும் திருப்பூர் தலா 1, விழுப்புரம் 25, விருதுநகர் 1. இவ்வாறு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளது.

கோயம்பேடு
இன்றைய நிலவரப்படி சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் அதிகம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அனைவரும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.

கடலூர் 2வது இடம்
இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், 2008 பேருடன் சென்னை முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கடலூர் மாவட்டம் இருக்கிறது. 229 பேர் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பாதிப்பு
கோவை மாவட்டத்தில் 146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு 136 பேர், மதுரை 91, திண்டுக்கல் 98, ஈரோடு 70, கரூர் 44, நாமக்கல் 76, தென்காசி 50, தஞ்சாவூர் 58, திருவண்ணாமலை 25, திருவள்ளூர் 95, தூத்துக்குடி 27, திருநெல்வேலி 64, திருப்பூர் 114, விழுப்புரம் 159. இதுதான் பாதிப்பு நிலவரம். ஆகமொத்தம், தமிழகத்தில் 4 ஆயிரத்து 58 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

பணியாளர்கள்
இந்த நிலையில்தான், வீட்டு வேலை பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம் என்ற தளர்வு திரும்பப் பெறப்படுகிறது. முன்பு சென்னை ஆணையர் அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று வேலைக்கு செல்லலாம் என அரசு கூறியிருந்தது. பாதிப்பு அதிகரித்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications