தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? மருத்துவ குழுவுடன் முதல்வர் ஆலோசனை.. விரைவில் முக்கிய அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து மருத்துவர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். விரைவில் இதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
Recommended Video
தமிழகம் உட்பட நாடு முழுக்க, நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதன் பிறகும் தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பதா, கைவிடுவதா என்பது தொடர்பாக அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் கூட, தமிழகத்தில் மருத்துவ நிபுணர் குழு, மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்துவிட்டுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கு விதிகள் தொடர்பான முடிவுகளை எடுக்கிறார்.
கடந்த முறையும் இதுபோல ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். மொத்தம் 3 முறை மருத்துவ குழு பரிந்துரையின்பேரில்தான், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
அதே போலத்தான் இன்றும் அரசால் நியமிக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த கூட்டத்தில், ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது, அல்லது மேலும் தளர்வு வழங்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. மருத்துவர் குழு எந்த மாதிரியான பரிந்துரைகளை வழங்க உள்ளது என்பது தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications