தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தொடக்கம்.. ரயிலில் செல்ல இ பாஸ் கட்டாயம்
சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே சிறப்பு ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதில் பயணம் செய்யும் மக்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்திற்கு உள்ளே 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே துறை முடிவு எடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி, கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போக்குவரத்து தற்போது தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் மக்களுக்கு இ - பாஸ் கட்டாயம் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ரயில் சேவை நாளையில் இருந்து துவங்குகிறது. அதாவது மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணிப்பதற்கு இ-பாஸ் கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டது . தமிழகத்தில் மண்டலங்களுக்கு உள்ளே பேருந்தில் செல்ல பாஸ் தேவை இல்லை என்று இன்றுதான் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய இ பாஸ் தேவை இல்லை. இதில் மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று நேற்றுதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக அரசு பயணிகளுக்கு ரயிலில் செல்ல இ பாஸ் பெறுவதற்கான வசதியை இணையத்தில் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ரயிலில் செல்வோர் இ பாஸ் பெற https://tnepass.tnega.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications