வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு!
சென்னை: வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.12,500ஆக இருந்த வேட்டை தடுப்பு காவலர்களின் ஊதியம், இனி ரூ.15,625 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 669 வேட்டை தடுப்பு காவலர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, ஆனைமலை, முதுமலை, விருதுநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வேட்டை தடுப்பு காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்த வேட்டை தடுப்பு காவலர் பணியில் பெரும்பாலும் பழங்குடி இளைஞர்கள் தான் பணியாற்றி வருகின்றனர்.

10 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றினால், இவர்களுக்கு காப்பாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பழங்குடி இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு வேட்டை தடுப்பு காவலர் பணியை தனியார் வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பணியில் இருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் வேட்டை தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை வேட்டை தடுப்பு காவலர்களாக பணியாற்றி வந்தவர்களுக்கு ரூ.12,500 ஊதியமாக அளிக்கப்பட்டு வந்தது. இனி வேட்டை தடுப்பு காவலர்களுக்கான ஊதியமாக ரூ.15,625ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக 669 வேட்டை தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த அறிவிப்பு அப்பணியில் ஈடுபட்டு வருபவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அவர்கள் தரப்பில் ரூ. 19,525ஆக ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அதேபோல் ரோந்து பணி, கண்காணிப்பாளர், சந்தன மர பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு தினசரி ரூ.311ஆக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications