சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி.. 3 கடைகள் அமைக்க தமிழக அரசு அனுமதி
சென்னை: சென்னை தீவுத்திடல் உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Recommended Video
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று முதல் 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா 2022 என்ற பெயரில் இந்த உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
இந்த உணவுத் திருவிழாவை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் பீப் பிரியாணி அரங்கு ஏன் அமைக்கப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
இதற்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளிக்கையில், நானும் பீப் பிரியாணி சாப்பிடுபவன்தான். ஆனால் இங்கு அரங்கு அமைப்பதற்கு யாரும் அனுமதி கோரவில்லை என்பதால் பீப் பிரியாணிக்கென அரங்கம் அமைக்கப்படவில்லை என்றார்.

சென்னை தீவுத்திடல்
இந்தநிலையில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், சென்னை உணவு திருவிழாவில் 3 பீப் பிரியாணி கடைகளை அமைக்க சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி கேட்டனர்.

ஆய்வு
அதன்பேரில் அவர்களுக்கு ஸ்டால் அமைத்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. இன்று மாலை உணவு திருவிழாவுக்கு சென்று பீப் பிரியாணி விற்பனையை பார்வையிடவுள்ளேன் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி இடம் பெறாதது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

அனுமதி கிடைத்தது
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முழு முனைப்புடன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த நிலையில் தற்போது பீப் பிரியாணி ஸ்டால் அமைக்க சிலர் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தற்போது ஸ்டால் அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசை பொருத்தமட்டில் பீப் பிரியாணி கடை போடுவதற்கு யாரும் முன்வரவில்லை என்பதால் உணவு திருவிழாவில் பீப் இடம்பெறவில்லை. தற்போது 3 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதால் அவர்கள் கடையை அமைக்க அனுமதி கொடுத்துள்ளது என்பதுதான்!
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications