இனி அரசு மருத்துவமனைகளில் 3 ஷிப்ட்களில் பணி.. தமிழக அரசு அரசாணை
சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவ பணியாளர்களுக்கு 3 ஷிப்ட் முறையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையும் என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் உள்பட மருத்துவ கடை நிலை ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
முதல் ஷிப்ட்டில் 50 சதவீதம் பேரும், 2, 3 ஆவது ஷிப்ட்களிலஸ் தலா 25 சதவீதம் பேரும் என பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications