சூரிய ஆற்றல் மூலம் இலவச மின்சாரம்! மகிழ்ச்சியில் விவசாயிகள்.. தமிழ்நாடு அரசின் மாஸ் அறிவிப்பு
சென்னை: சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விவசாய நிலங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை அவர்கள் அரசுக்கும் விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் தொழிலுக்கு மின்சாரம் இன்றியமையாததாகும். ஆனால் தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதால் கிராமப்புறங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் வேளாண் தொழில் சில இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், இப்பிரச்னையை தீர்க்க மாற்று யோசனை ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைத்திருக்கிறது. அதாவது, சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைப்பதுதான் அந்த யோசனை.

இதன் மூலம் பயன்பாடு போக மீதமுள்ள மின்சாரத்தை விவசாயிகள் அரசுக்கு விற்கவும் முடியும். இந்த மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்களை வாங்க பயனாளிக்கு 30% நிதியை ஒன்றிய அரசும், 30% நிதியை மாநில அரசும் வழங்குகிறது. மீதமுள்ள 40% நிதி டான்ஜெட்கோ உதவியுடன் வங்கிக்கடன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் விரிவாக பேசியிருந்தார்.
அதாவது தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சூரிய ஒளி ஆற்றல் அதிகமாக உள்ளதால் அங்கு அதிக அளவில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு வசதியாக புதிய 400 கிலோ வோல்ட், 230 கிலோவோல்ட், 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் 5000 விவசாய மின் இணைப்புகளை, சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. எதிர்காலத்தில் சூரிய ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்த உலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. எனவே தமிழ்நாடும் இதற்கான முன்னேற்பாடுகளை இந்த சோதனை முயற்சி மூலம் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications