ஸ்டிரைக்கில் பங்கேற்றால் சம்பளம் இல்லை.. அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
Recommended Video

சென்னை:மத்திய அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் வரும் 8, 9 தேதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ள நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் தொழிற் சங்கங்கள் வரும் 8,9 தேதிகளில் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து, மின்வாரி யம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் அரசுப்பணி கள் முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் போராட் டத்தில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூடுதல் தலைமை செயலாளர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அங்கீகரிக்கப்படாத சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் வரும் 8, 9 தேதிகளில் நடத்த உள்ள வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு அளித்து தமிழகத்திலும் போராட்டம் நடத் தப்பட உள்ளதாக தகவல் கிடைத் துள்ளது. அவ்வாறு போராட்டம் நடத்தி அரசு நிர்வாகத்தை பாதித் தால் அது விதிமுறை மீறிய செயல்.
எனவே, விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது. அன்று பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பட்டியல் அன்றைய தினம் காலை 10.30 மணிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பப்பட வேண்டும்.
வேலை நிறுத்த நாட்களில் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் ஒப்பந்தப் பணியாளர்கள், பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications