மனதின் குரல் 100: பிரதமர் மோடி புகழ்ந்த தமிழ்நாட்டு ஆளுமைகளை சிறப்பித்த ராஜ்பவனில் ஆளுநர் ரவி!
சென்னை: பிரதமர் மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அடையாளம் காட்டிய தமிழ்நாட்டு ஆளுமைகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிறப்பித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களோடு உரையாடும் மனதின் குரல் வானொலி உரையாடல் நிகழ்ச்சியின் நூறாவது அத்தியாயம் இன்று ஒலிபரப்பானது. நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் இதுவரை ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதோடு பல்துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களும், வேளாண் சமுதாயத்தைச் சார்ந்த விவசாயப் பெருமக்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.

பிரதமரால் பாராட்டப்பட்ட ஆளுமைகள் பேசும்பொழுது, இது எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்றும், மிகச் சாதாரண மனிதர்களான எங்களை பிரதமர் அடையாளம் கண்டு எங்கள் பணியினை பாராட்டியது எங்களுக்கு, மேலும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்றும், இது எங்களை இன்னும் நம் சமுதாயத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்ற தூண்டியது என்றும் தெரிவித்தனர்.
அதன் பின் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்திருந்த விருந்தினர்களிடையே உரையாற்றினார். மிக எளிய மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களின் வெற்றிக்கதைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை இந்த மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் சிறப்பித்தது இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறினார். நாட்டின் பாரம்பரியம் குறித்த கருத்துக்களையும் தனது அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மனதின் குரல் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்கள் பற்றியும் ஆளுநர் பேசினார். ஆளுநர் அனைத்துத் துறைகளிலும் நாட்டின் தற்போதைய வளர்ச்சி குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆளுநர் பட்டியலிட்டார். பாரம்பரிய நெல் சாகுபடியில் இந்தியாயின் வரலாறு, எதிர்கால இலக்கு மற்றும் முன்னேற்றம் பற்றி தரவுகளுடன் எடுத்துக் கூறினார்.

முன்னதாக, ஆளுநர் அவர்கள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தொகுத்திருந்த 'மனதின் குரலில் தமிழ்நாட்டு ஆளுமைகள்' எனும் டிஜிட்டல் புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனதின் குரல் ஆளுமைகளை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications