சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை: சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது மக்களின் வரவேற்பு அற்புதமாகவும் உற்சாகவும் இருந்தது. இது நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது.

பல்வேறு இடைஞ்சல்கள் இருந்தாலும் மக்கள் சாரை சாரை வந்து ஆதரவு தந்தது மகிழ்ச்சியாக உள்ளது.
3 எம்.எல்.ஏ.க்கள் மீதான சபாநாயகர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தனது கடமை செய்து உள்ளது. ஆனால் தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை செய்துக் கொண்டேதான் இருப்பார்கள்.
இதுவும் ஒரு வகையான விளையாட்டாக தான் பார்க்கிறேன். ஒருவர் தடையை கோராமல் இருவர் சென்று தடை கோருவது விளையாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டு உள்ளார். தமிழகத்தில் இருந்து மாணவர்கள் வந்து சீட் பெறும் போது டெல்லி மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை.
யூனியன் பிரதேசமாக உள்ளதால் மாநில அந்தஸ்து கேட்டுக் கொண்டு இருக்கிறார். தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிற யாரும் கெஜ்ரிவால் உள்பட யாரும் பேசியிருக்க மாட்டார்கள். அப்படி பேசியிருந்தால் அது தவறு தான்.
சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுபாட்டை போக்க அரசு முன் ஏற்பாடு நடவடிக்கை எடுத்திருந்தால் தவிர்த்திருக்கலாம். அரசு முன் ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்பது தான் நீர்நிலை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தமிழிசை பேசிக்கொண்டே இருப்பார். அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி கொண்டு இருக்கிறது. இப்போது விவாதம் செய்ய வேண்டியதில்லை.
இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications