ஊரக உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை சுமுகமாக நடத்துவது தொடர்பாக இன்று மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறே தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மேலும், அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தென்காசி, ராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும் நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்த்தூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications