தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் வெட்டு பிரச்சினை நிலவும் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆகும். இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த சில மாதங்களாக சில இடங்களில் ஆங்காங்கே மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ஒரு சில இடங்களில் அணில் மின் வயரில் ஏறி குதித்து விளையாடியதால் மின் கமபிகள் அறுந்துவிட்டது என்றார்.

மின்வெட்டு
மின் வெட்டுக்கு காரணம் அணில் என அவர் கூறியதிலிருந்தே நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர். இதையடுத்து மெல்ல மெல்ல நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினை தலைதூக்கியது. கடந்த மாதம் இறுதியில் கரூரில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

3 மாநிலங்கள்
அப்போது அவர் தமிழகம் உள்பட ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சீரான மின் விநியோகம்
ஆனால் தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு சீரான மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தவறான கருத்துகளை பேசி மக்களிடம் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் 6 முதல் 7 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது.

காற்றாலை
தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது என்றார் அவர். இந்த நிலையில் இன்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், தமிழகம் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது.

நிலக்கரி டெண்டர்
விதிமுறைகளுக்கு உட்பட்டே நிலக்கரி டெண்டர் விடப்படுகிறது. ஆறரை நாட்களுக்கான நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது. குஜராத் உள்பட பிற மாநிலங்கள் கூடுதல் விலைக்கே இறக்குமதி செய்கின்றன. தமிழகத்தில் ஓராண்டில் 24 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றியிருக்கிறோம் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications