தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. ப்ரமோஷனும் உண்டு.. யார் யார் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இன்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இடமாற்றம் குறித்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிபிசிஐடி ஐஜியாக இருந்த தேன்மொழி, தமிழக போலீஸ் அகாதெமிக்கு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை ஏஎஸ்பியாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக், பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட தெற்கு எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட வடக்கு துணை ஆணையராக இருந்த ரோஹன் நாதன், கோவை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக விவேகானந்தா சுக்லாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஆனந்த் குமார் ஐஏஎஸ், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரிக்கு மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி எஸ்பி ஸ்டாலினுக்கு கோவை நகர வடக்குப் பிரிவு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக டி.ரமேஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை காவல் துறை நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக கே ஆதி வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர காவல் துறை துணை ஆணையராக எஸ்.எஸ்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications