ஜெர்மனி தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்.. துபாயை தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டம்
சென்னை: ஜெர்மனியில் நாளை முதல் நடைபெற இருக்கும் தொழில் கண்காட்சியில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கவும், சர்வதேச நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் MADE IN TAMILNADU என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

துபாய் எக்ஸ்போ
துபாய் எக்ஸ்போ தொழிற் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. 192 நாடுகள் கலந்துகொண்ட இந்த கண்காட்சியில் கடந்த மார்ச் 26, 27 ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசின் அரங்கம் அமைக்கப்பட்டது. அதில், தமிழ்நாடு அரசின் சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டன. துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்து பார்வையிட்டார்.

ஜெர்மனி கண்காட்சி
இந்த நிலையில் நாளை (மே 30) அன்று ஜெர்மனியில் உலக புகழ்பெற்ற ஹன்னோவர் மெஸ்ஸே (Hannover Messe) என்ற தொழில் கண்காட்சி நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொழில் கண்காட்சியில் பல உலக நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கின்றன.

என்ன சிறப்பு?
இந்த கண்காட்சியில் நவீன கண்டுபிடிப்புகள், வெளியுலகிற்கு அதிகம் அறிமுகம் இல்லாத உள்நாட்டு தயாரிப்புகள், எதிர்காலத்துக்கு தேவையான கண்டுபிடிப்பு மாடல்கள், தொழில் திட்டங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்படுவதுடன், புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகம் செய்யப்படவும் இருக்கின்றன. விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், பன்னாட்டு அரசு உயரதிகாரிகள் இதில் கலந்துகொண்டு பேச இருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசின் அரங்கம்
இதில் துபாய் எக்ஸ்போவை போன்றே தமிழ்நாடு அரசு சார்பில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது. ஜெர்மனி கண்காட்சியில் அமைக்கப்படும் தமிழ்நாடு அரங்கத்தில் உற்பத்தில், ஆற்றல், லாஜிஸ்டிக்ஸ், நெட்வொர்க்கிங் போன்ற துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications