உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு.. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்துள்ளதால் நாளை நாளை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலை அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற விருந்த நிலையில் திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக நடைபெறவில்லை. அதன் பிறகு மூன்று வருடங்களாக தொகுதி மறுவரையறை, வார்டு மறுவரையறை பணிகள் காரணமாக நடைபெறாமல் இருந்தது.
மண்புழு போல ஊர்ந்து போய் முதல்வராக மாட்டேன்.. மானங்கெட்டு போகவில்லை.. ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!
உள்ளாட்சி தேர்தல்
இதனிடையே விரைவாக உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும் இதற்கான அறிவிப்பானை டிசம்பரில் வெளியிடப்படும் என்றும் கூறியிருந்தது.
தேர்தல் ஆணையர் பழனிச்சாமி
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்துள்ளதால் நாளை நாளை உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவலை அவர் கூறியுள்ளார்.
விடுமுறையின் போது
இதனிடையே அரையாண்டு தேர்வு விடுமுறையில் தான் உள்ளாட்சி தேர்தல் வைப்பது எளிதாக இருக்கும் என்பதால் டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் எப்போது என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டும் தெரியவரும்.எனவே அதுவரை காத்திருக்க வேண்டும்.
இப்போது அறிவிப்பு
முன்னதாக உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக, திமுகவினர் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியானது, அதை மறுக்கும் விதமாக அதிமுக மற்றும் திமுக இரண்டுமே விளக்கங்களை கொடுத்தன. இந்த நிலையில் தான் நாளை தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்துள்ளது,.