இதுதான் தொடக்கம்.. விழ விழ எழுந்து நிற்கும் நாம் தமிழர்.. தேர்தலில் மாஸ் செயல்பாடு.. மாபெரும் ஆதரவு!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    TN உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைத் தொடக்கம் - வீடியோ

    சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி அதிக அளவில் வாக்கு சதவிகிதத்தை பெற்று வருகிறது. பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய இரண்டு பதவிகளுக்குமான தேர்தலில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

    ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் 4101 இடங்களுக்கு முடிவு தெரிந்துள்ளது. அதில் திமுக 1934 , அதிமுக 1708, மற்றவை - 438 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் 453 இடங்களுக்கு முடிவு தெரிந்துள்ளது. அதில் திமுக 238, அதிமுக 214, மற்றவை - 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மொத்தத்தில் இரண்டிலும் திமுகதான் தற்போது முன்னிலை வகிக்கிறது.

    போட்டி

    போட்டி

    இந்த தேர்தலில் திமுக அதிமுக இடையில்தான் தீவிரமாக போட்டி நிலவி வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் அமமுக பல இடங்களில் மதிக்கதக்க வகையில் போட்டி போட்டுள்ளது. அதே சமயம் மக்கள் தமிழகம் முழுக்க நாம் தமிழர் கட்சிக்கும் பெருவாரியான வாக்குகளை அளித்துள்ளது.

    நாம் தமிழர்

    நாம் தமிழர்

    நேற்றுதான் தமிழகத்தில் நடந்த ஒரு தேர்தலில் நாம் தமிழர் முதல் வெற்றியினை பதிவு செய்தது. ஆம் கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வென்றுள்ளது. அங்கு 11வது வார்டில், நாம் தமிழர் கட்சி சார்பில், விவசாயி சின்னத்தில், போட்டியிட்ட, நெ.சுனில், என்பவர் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்வாகியுள்ளார்.

    வெற்றி எப்படி

    வெற்றி எப்படி

    இவர் அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட 218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றார். இதேபோல் வட மாவட்டங்களில் சில இடங்களிலும், டெல்டா மாவட்டங்களில் சில இடங்களிலும் நாம் தமிழர் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

    மாஸ் முன்னேற்றம்

    மாஸ் முன்னேற்றம்

    பல பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடம் பிடித்துள்ளது.இன்று மாலைக்குள் மேலும் சில இடங்களில் நாம் தமிழர் கட்சி வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அதிமுக, திமுக மற்றும் அமமுக மூன்று கட்சிகளும் அதிக பண பலம் கொண்ட கட்சிகள். தமிழகத்தில் நாம் தமிழர் பெரிய அளவில் பண பலம் இல்லாமல் தேர்தலை சந்தித்தது.

    தோல்வி

    தோல்வி

    அதேபோல் இதற்கு முந்தைய தேர்தலில் தோல்விகளை சந்தித்தாலும் கூட, மனம் தளராமல் நாம் தமிழர் கட்சி விடாமல் தேர்தலை சந்தித்து வருகிறது. ஜனநாயக ரீதியாக மிகவும் ஆரோக்கியமான போட்டியை வழங்கி வருகிறது. இதன் பலனாக முதல் வெற்றியை சந்தித்துள்ளது

    வாக்கு வங்கி அரசியல்

    வாக்கு வங்கி அரசியல்

    இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் சில தேசிய கட்சிகளே மாநில கட்சிகள் பின்னில் நிற்கும் போது, சீமானின் நாம் தமிழர் கட்சியோ தனித்து சுயமாக வளர்ந்து வருகிறது. எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் தன்னம்பிக்கையுடன் எழுந்து பிரச்சாரம் செய்து தேர்தல் சந்திக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+