தேர்தல் ஆணைய அட்டவணையை பாருங்க.. தமிழகத்தில் நாங்கதான் 3வது பெரிய கட்சி.. சந்தோஷத்தில் பாமக!
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான், தேர்தல் ஆணையத்தின் அட்டவணையை பார்த்தாலே இது புலனாகும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி நாங்கள்தான், தேர்தல் ஆணையத்தின் அட்டவணையை பார்த்தாலே இது புலனாகும் என்று பாமக கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. திமுக, அதிமுகவை அடுத்து தமிழகம் முழுக்க அமமுக, நாம் தமிழர் கட்சிகள்தான் அதிக இடங்களை வென்றுள்ளது.
இதில் திமுக மாபெரும் வெற்றியை பெற்று, வெற்றி கூட்டணியாக திகழ்கிறது. அதிமுகவும் அதிக இடங்களை வென்று ஆபாரமாக வென்றுள்ளது. அதேசமயம் பாமகதான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று அக்கட்சி வாதிட்டு வருகிறது.

அறிக்கை வெளியிட்டனர்
இது குறித்து பாமக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பாமக மிகவும் வலுவான கட்சி என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. அதிமுக, திமுகவிற்கு சிறந்த மாற்று எப்போதும் பாமகதான் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஊராக உள்ளாட்சி தேர்தலில் பாமக சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையர்
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி எத்தனை இடங்களில் வெற்றிபெற்றது என்று கூறப்படவில்லை. பாமக பல இடங்களில் வென்றும் கூட, மற்றவை என்று பாமகவை குறிப்பிட்டு சுறுக்கிவிட்டனர். அதை எங்களால் ஏற்க முடியாது.

வெற்றி எப்படி
இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை விட பாமகவின் வெற்றி விழுக்காடு தான் அதிகம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட இடங்களில் 52.09 விழுக்காட்டு இடங்களை வென்றுள்ளது. கட்சி மீது மக்கள் வைத்து இருக்கும் தீவிர ஆதரவை இந்த வெற்றி காட்டுகிறது.

உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக 36 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களில் வென்றது. இது குறிப்பிடத்தகுந்த சாதனை. அதேபோல் 432 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 217 இடங்களில் வென்று இருக்கிறோம் .

ஆனால் என்ன
ஆனாலும் எங்கள் கட்சியின் பெயர் அந்த இணைய பக்கத்தில் இல்லை. இதனால் நாங்கள் வழக்கு தொடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அதற்கு பின் தேர்தல் ஆணையம் எங்கள் கட்சியின் பெயரை அதில் சேர்த்தது. இந்த அட்டவணை மூலம் தமிழகத்தில் நாங்கள் மூன்றாவது கட்சி என்று உறுதியாகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications