சொன்னா.. சொன்னபடி.. நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகிறது
சென்னை: நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு 12ம் வகுப்பை போல். 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 11ம் வகுப்புக்கு 1200 மதிப்பெண், 600 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது

கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கிய தேர்வு மார்ச் 22ம் தேதி நிறைவு பெற்றது. பிளஸ் 1தேர்வுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் வினாத்தாள்களை திருத்தும் பணியினை ஆசிரியர்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்தார்கள். வினாத்தாள் திருத்தும்பணி நிறைவு பெற்றதையடுத்து மதிப்பெண் பட்டியலை கணிணியில் ஏற்றும் பணியில் நடந்து வருகிறது. அறிவித்தபடி நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.nic.in, www.dge2.nic.in, ஆகிய இணையதளங்களில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிய முடியும். அத்துடன் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் வந்துவிடும். என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications