உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு.. ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு
Recommended Video

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின், முடிவிற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட தமிழகத்திலுள்ள பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சட்டசபையில் இன்று ஸ்டாலின் பேசுகையில், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது. அதை நாசப்படுத்திடக் கூடியதுமான செயல்.

மறைந்த நீதிபதி ரத்னவேல் பாண்டியன், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது, என்று தீர்ப்பளித்துள்ளார்.
69% இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் தமிழகத்திலிருந்து முதல் எதிர்ப்புக் குரல் ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் பண்படுத்தித் தந்த வழியில், சமூக நீதியின் நாற்றங்காலாகத் தொடர்ந்து இருந்துவரும் தமிழக சட்டசபையிலிருந்து சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை இன்றே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பாமக நிறுவனர், ராமதாஸ், டிவிட்டரில் கூறுகையில், உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைகணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம், உண்மையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக, ஏற்கெனவே இருக்கும் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட்டம் ஆகும். தேர்தல் ஆதாயத்திற்காக, முற்பட்ட வகுப்பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும், மத்திய அரசு தனது முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications