கோவை எஸ்பி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.. தமிழகம், புதுச்சேரியில் நாளை மறுநாள் வக்கீல்கள் ஸ்ட்ரைக்
சென்னை: பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள், ஒரு நாள் முழுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற, பாலியல் பலாத்கார சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில், முதலில் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக் குழுக் கூட்டத்தின், ஆலோசனை ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வரும் 18ம் தேதி திங்கள்கிழமை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 35,000 வழக்கறிஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
கோவை மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவும், அவரை முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யவும் வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications