தமிழகத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா.. பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு.. ஒரே நாளில் 90 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1683 பேராக அதிகரித்துள்ளது.
Recommended Video
சென்னையில் இன்று புதிதாக 27 பேருக்கு, பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 20ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மூதாட்டியும், மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளனர். எனவே நேற்று 18ஆக இருந்த பலி எண்ணிக்கை, இன்று 20ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400ஆக உள்ளது. கோவையில் 134 பேர் பாதிக்கப்பட்டு, 2வது இடத்தில் உள்ளது. இன்று சென்னையில் 10 வயதுக்கு குறைந்த குழந்தைகள் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் மொத்தம், 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிகபட்சமாக 29 பேரும், கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து 27 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் 20 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆக மொத்தம், இதுவரை தமிழகத்தில் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications