6 நாட்களாக நடந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சென்னையில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் கடந்த 6 நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர் . 2009க்கு முன் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு பின் பணிக்கு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே நிறைய ஊதிய வேறுபாடு இருந்தது.

15,000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை ஊதிய வேறுபாடு இருந்தது. இந்த வேறுபாட்டை களைய வேண்டும் என்று பல நாட்களாக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இதற்காக முதல்வரை சந்திக்கவும் திட்டமிட்டு இருந்தார்.
கடந்த 24ம் தேதி இவர்கள் தமிழக முதல்வர் பழனிச்சாமியை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசியில் முதல்வர் இவர்களை சந்திக்கவில்லை. இதனால் அதேநாள் இடைநிலை ஆசிரியர்கள் எல்லோரும் போராட்டத்தில் குதித்தனர்.
எல்லோரும் உண்ணாவிரத போராட்டம் செய்ய தொடங்கினர். 300 ஆசிரியர்கள் வரை இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த போராட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன் 6 நாட்களாக இந்த போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. நேற்று ஊதிய முரண்பாடு தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பாக உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை இயக்குனர் பிரதீப் யாதவ், இதற்காக ஒரு குழு அமைத்து விரைவில், சம்பளம் உயர்த்தி தரப்படும் என்று கூறியதால் போராட்டம் நிறுத்தப்பட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications