இனி ஹெல்மெட் போடாவிட்டால் 10 மடங்கு அபராதம்.. தமிழக போக்குவரத்து போலீஸ் அதிரடி முடிவு
சென்னை: இனி ஹெல்மெட் போடாவிட்டால் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவில் 93 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான மாற்றங்கள் போக்குவரத்து வீதிமீறலகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் உள்ளன.

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், தற்போது வரை தமிழகத்தில் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் அபராதம் 100 ரூபாய் தான் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக போக்குவரத்து காவல்துறையினர் விரைவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர். விரைவில் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் இப்போது உள்ள அபராதத்தை விட 10 மடங்கு அதிகம் அபராதம் விதிக்க போவதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி முன்பு ஹெல்மெட் போடாமல் முன்பு வாகனம் ஓட்டினால் எச்சரித்துவிடுவார்கள் அல்லது 100 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க உள்ளார்கள். வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் கட்டயாம் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். எனவே சட்டம் நடைமுறைப்படுத்தும் முன்பு இருசக்கர வாகனம் வைத்துள்ளோர் ஓடிப்போய் ஒன்று அல்லது இரண்டு ஹெல்மெட் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் அந்தநேரத்தில் ஹெல்மெட் விலை தாருமாறாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதனிடையே மேலும் சில போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் விதிக்கப்போகும் அபாரதங்களையும் சொல்லிவிடுவோம். இனி வாகனத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். சிக்னலை மீறுவது போன்ற வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சில விதிமீறல்களுக்கு முன்பு 100 ரூபாய். அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி அபராதம் 500 ரூபாய். ஆகும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் முன்பு 500 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் இனி 5,000 ரூபாய் வசூலிக்கப்படும். குடித்துவிட்டு ஓட்டினால் 1 முன்பு 2000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். இனி குடித்தால் வண்டியை தொட்டால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் கட்ட வேண்டியது வரும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications