தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மழை பெய்யும்.. கடும் கோடைக்கு இடையே, ஒரு குதுகல அறிவிப்பு
சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் மேற்கு வங்கத்தில் நேற்று, கரையை கடந்த போதிலும், வெப்பச்சலனம் காரணமாக, இந்த மழை பெய்யக்கூடும்.
Recommended Video
தமிழகத்தின், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

இதனிடையே வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது: தற்போது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் வீசி வருகிறது. இதன் காரணமாக வேலூர், திருத்தணி, கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்த பகுதிகளில் வெப்பநிலையானது 41 டிகிரி வரை உயர்ந்துள்ளது. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு, வட தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட உயர்ந்து, வெப்ப காற்று வீசக்கூடும்.

கடந்த, 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொருத்தளவில் தென் தமிழகத்திலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், ஓரிரு இடங்களில் கோடை மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications