கவனம்.. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெப்பநிலை உயர போகுதாம்! எவ்வளவு தெரியுமா? வானிலை ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை.
ஆனாலும் சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் பிற்பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

சென்னை
முன்னதாக மார்ச் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் லேசாக உள்மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்தது. உள் தமிழகப் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மழை இல்லை
ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பெரிதாக தமிழ்நாட்டில் எங்கும் மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இன்றும் நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்து இருந்தது.

தமிழ்நாடு வானிலை
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1, 2 மற்றும் 3 ஆகிய மூன்று நாட்கள் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பாக தற்போது 35 - 36 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவி வருகிறது. இது வேகமாக உயரும்.

வெயில்
3 நாட்கள் இயல்பை விட கூடுதலாக 3 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் பல இடங்களில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் மின்னணு பைக்குகள் கூட பற்றி எரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications