கஜா பாதித்த டெல்டா மாவட்டம் டூ சென்னை... 3 நாட்களுக்கு செம மழைக்கு வாய்ப்பு- வெதர்மேன்
சென்னை: கஜாவால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டலத்தில் உருவாகி இருக்கும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
தெற்கு அந்தமான் பகுதி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மாலை தெற்கு வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.

எச்சரிக்கை
இதனால் 19-ஆம் தேதி (நாளை) முதல் 21-ஆம் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுகையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை வரை மழை பெய்யும். கஜா புயலின்போது மழை பெய்யாத இடங்களில் அதாவது வட தமிழகத்தில் மழையை கொடுக்கும்.

செம மழை
டெல்டா மாவட்டங்களில் கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20-ஆம் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். புயலாக மாறாது ஆனால் வடதமிழகத்துக்கு செம மழைக்கு வாய்ப்புள்ளது.

பாண்டி
காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 20 முதல் 22-ஆம்தேதி வரை நல்ல மழை பெய்யும். அதிலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரிக்கு கனமழையை கொடுக்கும்.

நல்ல மழை உறுதி
இவற்றில் சில இடங்களில் மிக கனமழையை கொடுக்கும். சென்னையில் குறைந்தபட்சம் இரு நாட்களுக்காவது நல்ல மழை உண்டு. புயல் உருவாக வாய்ப்பில்லை. ஆனால் வடதமிழகத்துக்கு நல்ல மழை உறுதி என்று தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications