சென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெரிய கன மழை பெய்து உள்ளது என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்று துவங்கியதாக அறிவித்தாலும் அறிவித்தார்கள், ஆரம்பத்திலேயே சென்னையில் அதிரடி காட்டி விட்டது மழை.
நேற்று இரவு சென்னை மக்கள் தூங்கச் செல்லும் வரை இவ்வளவு பெரிய மழை பெய்யும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

விடிய விடிய கன மழை
இரவோடு இரவாக பெய்ய தொடங்கியது கனமழை. இன்று காலை வரை விட்டு விட்டு அடித்து நொறுக்கியது. சென்னை அண்ணா பல்கலை பகுதியில் அதிகாலை வரை 7.2 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கம் 5.5 செ.மீ, மீனம்பாக்கம் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், சோழாவரம் பகுதியில் 5.5 செ.மீ மழையும் பெய்துள்ளது.

அடர்த்தியான மழை
இடைவிடாது பெய்த பலத்த மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கு காரணம் மொத்தமாக அடர்த்தியாக பெய்த கனமழை தான் என்று கூறுகிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ரெட் தக்காளி
தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், சென்னையின் மீது எவ்வாறு மேகமூட்டம் இருந்தது என்பது பற்றிய ஒரு செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா நகர் ஏரியாவின் மேற்பரப்பில் சிவப்பு வண்ணத்தில் மேகங்கள் குறிக்கப்பட்டிருந்தது. இதை தக்காளி என்று வர்ணிக்கிறார் பிரதீப் ஜான். இதுபோன்ற தக்காளி உருவாகுவது கன மழையை குறிக்கும். இன்றும் அதுதான் நடந்துள்ளது.

வானம் பொத்துக் கொண்டது
மேலும் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை நகரின் பல பகுதிகளில் கன மழை பதிவாகி உள்ளது. மயிலாப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்துக்குள் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியதைபோல மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் செஞ்சுரி அடித்து உள்ளன அதாவது 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி உள்ளது மயிலாப்பூர் பாடி பாலவாக்கம் போன்றவை இந்த லிஸ்டில் வருகின்றன மிகவும் அடர்த்தியாக மழை பெய்ததால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications