மயிலாடுதுறையில் "டிராபிக் ஜாமில்" மேகங்கள்.. வெறித்தனமான மழை.. ஒரே நாளில் டபுள் சென்சுரி? வெதர்மேன்
சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட நேரமாக மேகக் கூட்டங்கள் குழுமியிருப்பதை பார்த்தால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அதி கனமழை பெய்திருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாட்கள் ஆகின்றன. இதில் தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளது. இது புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் கூறியுள்ளது.
எனினும் மிக அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் நேற்று இரவு கனமழை பெய்தது.

அதிகாலை
அது போல் இன்று அதிகாலையும் மழை பெய்தது. பகல் நேரங்களில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இது போன்று தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் இன்றைய தினம் 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வானிலை மையம்
இந்த கனமழை நாளையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது மழையின் நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட மணி நேரமாக மேகக் கூட்டங்கள் குழுமி இருக்கின்றன.

பேய் மழை
இதனால் அங்கு பேய் மழை பெய்து வருகிறது. அனேகமாக ரெட் அலர்ட் எச்சரிக்கைக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இப்படி பேய் போல் அடிக்கும் மழையை பார்த்தால் 24 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். சென்னையில் மேகக் கூட்டங்கள் அங்கும் இங்கும் சுற்றி வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சீராக மழை பெய்து வருகிறது. இவ்வாறு தனது வலைதளத்தில் அவர் கூறியுள்ளார்.

சென்னை- புதுவை
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தம் சென்னை- புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் பெய்ததை போல் இந்த இரு நாட்களில் மழை இருக்கும் என கூறியிருக்கிறார்கள். எனவே மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications