சென்னையில் இன்று பகலில் 10 செ.மீ. நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ மழைக்கு வாய்ப்பு-வெதர்மேன் கணிப்பு
சென்னை: சென்னையில் இன்று பகலில் சுமார் 10 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் நாளை காலைக்குள் மேலும் 10 செ.மீ. மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் 3 மணி நேரத்திற்கும் மேலாக நகரத் தொடங்கிய நிவர் புயல் 5 கி.மீ. வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இந்த புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும் மரங்கள் முறிந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் நாளை சென்னை மற்றும் புறநகரில் அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் தூரத்தில் இருக்கும்போது பெய்யும் மழைக்கே சிரமமாக இருக்கிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது சென்னையில் அதிகனமழை பெய்தால் என்ன செய்வது என வேதனையில் உள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
மற்றொரு போஸ்ட்டில் அவர் கூறுகையில் சென்னையில் எதிர்பார்ப்பை மீறி நல்ல மழை பெய்யும் நிலை இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இதுவரை எந்த பகுதியிலும் அதிகமான மழை பெய்யவில்லை. நுங்கம்பாக்கத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி 78 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
காலை 8.30 மணிக்கு மேல் தற்போதைய நிலவரப்படி மழையின் அளவு 78 மி.மீ.யிலிருந்து 100 மி.மீ ஆக இருந்தது. நாளை காலை நிலவரப்படி நுங்கம்பாக்கத்தில் 48 மணி நேர மழையின் அளவு 200 மில்லி மீட்டரை தாண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications