மேலும் 3 புதிய மாவட்டங்கள்.. லிஸ்ட்டில் எடப்பாடியும் இருக்காம்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி!
தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
சென்னை: தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது.
நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் தொடர்ந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மாவட்டங்களை உருவாக்குவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் 32 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை வேக வேகமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக ஐந்து மாவட்டங்கள் பிறந்தது. இதனால் மாவட்டங்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 37 ஆக உயர்ந்தப்பட்டது.

மாவட்டம்
இப்படி மாவட்டங்களில் பிரிப்பதற்கு பின் நிறைய அரசியல் காரணங்களும் இருக்கிறது. இதன் மூலம் அதிமுக பெரிய அளவில் பலன் அடையும். தேர்தலில் எளிதாக வெற்றிபெற இது பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கூறுகிறார்கள்.

சென்ற வருடம்
கடந்த வருடம் மட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, ஆகிய புதிய மாவட்டங்கள் பிறந்தது. வேலூர் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூரில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் உதயம் ஆனது.

தமிழகம் எப்படி
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எங்கு
அதன்படி நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து எடப்பாடி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கலாம் என்று கூறுகிறார்கள். இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கும்.
-
மதுரை ஜீவிதா நாச்சியார் வர்றாரு.. சசிகலாவின் முக்குலத்தோர் வாக்கு A டூ Z பிளான்.. ஆடிப்போன எடப்பாடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications