டிச. 16-க்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் மழை.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 16-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    சென்னை: வளிமண்டல சுழற்சி.. டிச.16 முதல் மீண்டும் மழை.. அறிவித்த வானிலை மையம்…!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

     Tamilnadu will witness rain again from Dec 16

    அந்த வகையில் கடந்த மாதம் 24ஆம் தேதி நிவர் புயல் காரணமாகவும் அதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் புரேவி புயல் உருவாகி தமிழகம் அருகே தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது.

    கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இனி வரக் கூடிய 2 நாட்களும் வறண்ட வானிலையே நிலவும். தொடர்ந்து பெய்து வந்த மழையாலும் வடகிழக்கு திசையிலிருந்து வீசும் குளிர்காற்று காரணமாகவும் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.

    எங்கும் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது. இது மேலும் சில நாட்களுக்கு தொடரும். அது போல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16-ஆம் தேதிக்கு பிறகு சில இடங்களில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+