Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை மக்களே அலர்ட்.. நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? வெளியான அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நாளை (நவ.24) வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிக்கப்படுவது வழக்கம். வழக்கமாக தமிழ்நாட்டில் மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் மின்சாரம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

TANGEDCO : Do you know where there will be power cut in Chennai on 24th November tomorrow?

இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளில் ஞாயிறு மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளமாட்டார்கள். அதாவது ஞாயிறு ஏதோவது சிக்கல் எழுந்தால் ஒழிய, மற்ற சமயங்களில் மின்சாரம் ரத்து ஆகாது. அதேநேரம் சென்னையில் சனிக்கிழமைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் வியாசர்பாடி பகுதியில் மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுவதால் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (நவ.24) வியாசர்பாடி பகுதியில் 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வியாசர்பாடி மார்க்கெட் மற்றும் தொழிற்பேட்டை, ஈ.எச்.ரோடு, பி.வி.காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர், காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர், எம்.பி.எம்.தெரு, சென்ட்ரல் குறுக்கு தெரு, ஏ.பி.சி. கல்யாணபுரம், சத்திய மூர்த்தி நகர் 1 முதல் 25-வது தெரு வரை சாமியார் தோட்டம், பல்லா தெரு 1 முதல் 3 வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ.காலனி மற்றும் சர்மா நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ன்னதாக இன்று(நவ.23) சென்னை கிண்டியில் தில்லை கங்கா நகர் ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 3, 7, 8 வது தெரு, நியூ காலனி 1, 2, 5, 8, 9 வது தெரு, மோகனபுரி 3, 4 மற்றும் 5 வது தெரு வரை , ஈ.பி. காலனி 1 முதல் 3வது தெரு, வி.வி.காலனி, வெல் நகர், ராம் நகர் மெயின் ரோடு 1 முதல் 8வது தெரு வரை, இந்திரா நகர் 1 முதல் 3 வது தெரு வரை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை ஏற்பட்டது. பராமரிப்பு பணி முடிந்ததும் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+