Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச மின்சாரம்..மாறுகிறதா மின் மீட்டர்கள்.. சட்டென இப்படி சொல்லிடுச்சே மின்வாரியம்.. சூப்பர் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மின்சார வாரியம் அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதுகுறித்த முக்கிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் நடைமுறையில் உள்ளன... இதில், விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச மின்சார திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 40,000 சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன.

Tangedco Huge Announcement and Action to prevent access in the Abuse of free Electricity

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 5, 2020-ல், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் ஒன்றினை கொண்டுவந்திருந்தது. அதன்படி, விவசாயிகள் இலவச மின்சாரம் பெறவேண்டுமானால், அரை ஏக்கர் நிலம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.. எனவே, ஆகஸ்ட் 5, 2020க்கு பிறகு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டும்தான் இந்த திருத்தம் பொருந்தும் என்று அறிவித்திருந்தது.

ஏமாற்றம்: இந்த அறிவிப்பினால், 2020 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பே விண்ணப்பித்திருந்த, கிட்டத்தட்ட 4 லட்சம் விண்ணப்பதாரர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களுககு முன்பு, திடீர் சர்ப்ரைஸ் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டிருந்தது.

அதாவது, புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தமானது 2020 ஆகஸ்ட் 5க்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், அதற்கு முன்பு விண்ணப்பம் செய்திருந்தால் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது, அதனால், கிடப்பில் போடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரிபார்த்து விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் தரவேண்டும் என்றும் தமிழக மின்வாரியம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

முறைகேடுகள்: தமிழக அரசின் இந்த உத்தரவு, விவசாயிகளுக்கு பெருத்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதும் ஆங்காங்கே பரவலாக நடந்துவருவது, மின்வாரியத்தை கவலைக்குள்ளாக்கி வருகிறது. அதனால், இந்த முறைகேட்டை உடனடியாக தடுக்கவும், மின்வாரியம் முனைப்பு காட்டி உள்ளது.

அந்தவகையில், முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் வாரியத் தலைவர் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறாராம்.. அந்த உத்தரவுகள் என்னென்ன என்பது, சார் உயரதிகாரிகள் சொன்னதாவது :

- அனைத்து குடிசை இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

- குடிசைக்காக மின் இணைப்பு பெற்று வீடு கட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மின் நுகர்வோரை 1 A விலைப் பட்டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பழுதான மீட்டர்களை உடனுக்குடன் மாற்றியமைக்க வேண்டும். பீடர்களில் மின்சாரத்தின் நிலை குறித்து அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

- அதிகளவு மின் இழப்பை ஏற்படுத்தும் பீடர்கள் குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். அதன்படி மின் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tangedco Huge Announcement and Action to prevent access in the Abuse of free Electricity

- மின்வாரிய அலுவலகங்களின் மின் பயன்பாட்டையும் கணக்கில் கொள்ள வேண்டும். இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- இது தொடர்பாக ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டும் இலவச மின்சாரம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

- உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவையை விரைந்து செலுத்த வேண்டும் என தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

- இதுபோன்று வருவாய் இழப்புக்கான முக்கிய காரணிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வை பொறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+