மின்வாரியம் திடீர் அதிரடி.. "கரண்ட் பில்லில்" வருது மாற்றம்.. "ஷாக்' மேட்டர்.. தமிழக அரசின் முடிவு?
சென்னை: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் தமிழக அரசு முனைப்பு காட்டி வரும்நிலையில், புது பிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது. இதுகுறித்து அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது?
நாடு முழுவதும் மின் இணைப்புகளின் பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.. மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசுகளும் இதை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கி உள்ளன.

அதன்படி தமிழக அரசும் இதில் முனைப்பு காட்டி வருகிறது. அனைத்து இணைப்புகளுக்கும் மின்மீட்டர் பொருத்தும் செலவினை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்றும் கூறியுள்ளது..
மின்வாரியம்: மின் வாரியத்தில் உள்ள செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு இப்படி ஒரு திட்டத்தை அறிவிக்கவும், பொதுமக்களும் இதற்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.. காரணம், சமீபகாலமாகவே, மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் குளறுபடிகள் நடப்பதாகவும், பல இடங்களில் கணக்கெடுப்பு பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 2 மாதத்தையும் தாண்டி கணக்கெடுக்கப்படுவதால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாயிருப்பதால், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை, தமிழக அரசு விரைந்து வேகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள்.
டெண்டர்கள்: அதன்படியே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசும் கையில் எடுத்தது.. இதற்காக டெண்டர்களும் கோரப்பட்டுள்ள நிலையில், பணிகள் துரிதமாகி உள்ளன.
பயன்கள்: இந்த ஸ்மார்ட் மின் மீட்டரில் மின் பயன்பாடு தேதி, மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.. பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக "சர்வர்" உடன் இணைக்கப்படும். இதனால் மின் பயன்பாட்டை தானாகவே ஸ்மார்ட்' மீட்டர் துல்லியமாக கணக்கெடுத்துவிடும். அதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று கணக்கு எடுக்க வேண்டியதில்லை.. கட்டண விவரமும் SMS மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்பட்டுவிடும்.
அதனால்தான், பொதுமக்கள் ஸ்மார்ட் மீட்டரை வீடுகளில் பொருத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். ஆனால், இந்த இந்த மின்மீட்டர் திட்டத்தினால் தமிழ்நாடு மின்வாரியத்தில் 15,000 பேர் வரையில் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மின்வாரிய பணியாளர்கள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சேக்கிழார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதிச்சூழல்: அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஸ்மார்ட் மீட்டர்களை செயல்படுத்துவது மதிப்பீட்டாளர்கள், வருவாய் மேற்பார்வையாளர்கள், மதிப்பீட்டு ஆய்வாளர்கள் உட்பட சுமார் 15,000 தொழிலாளர்களின் வேலையை கேள்விக்கறியாகிஉள்ளது. இவர்களின் வேலைக்கான உத்தரவாதத்தை மின்வாரியமோ, அரசோ இதுவரை அளிக்கவில்லை. நிதிச்சூல் சரியில்லாத நேரத்தில், ஸ்மார்ட் மீட்டருக்காக அரசு பெருமளவில் செலவு செய்வது பல கேள்விகளை எழுப்புகிறது.
மின்துறை தனியார்மய்மாக்கப்படலாம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு மத்திய அரசிடம் கூடுதல் அவகாரம் கோரியுள்ளது. மேலும் கேரள அரசை போன்று மின் ஊழியர்களுக்கு வேலை உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்பிக்கை: இதனிடையே, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தினால், மின்வாரிய ஊழியர்களுக்கு, மாற்று வேலை வழங்குவது குறித்து வாரியம் பரிசீலிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications