Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் அடியோடு மாறும் மதுபானங்களின் விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விலை குவாட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் வருவாயில் மதுபான விற்பனையில் கிடைக்கும் வருவாய் முக்கியமானது. இந்த ஆண்டு 450000 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி சராசரியாக 100 கோடி ரூபாய்க்கு மேல் மதுவிற்பனையாகும் நிலையில், திருவிழா, தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்பட பல்வேறு பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை மிகப்பெரிய அளவில் வசூலாகும்.

Tasmac Liquor price hike in Tamil Nadu from today

தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை மதுபானங்கள், 49 நடுத்தர வகை மதுபானங்கள், 128 பிரீமியம் வகை பிராண்ட் மதுபானங்கள், 35 வகையான பீர், 13 வகையான ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு மதுபானங்கள் எலைட் டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக விற்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இன்று தேதி முதல் மதுபாட்டில்களின் மீதான விலை உயர்வை அமல் படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 180 மி.லி கொண்ட அளவு கொண்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375மி.லி., 750மி.லி., 1000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் 500மி.லி., 325மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்துக்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சாதாரண, நடுத்தர ரக மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.10-ம், ஆஃப்-க்கு ரூ.20-ம் புல் பாட்டில் ரூ.40-ம் உயருகிறது. இதே போல், உயர் ரக மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், ஆஃப்க்கு ரூ.40-ம், ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80-ம் உயரும். ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவது தொடரும் நிலையில், மதுபானங்கள் விலை உயர்வு குடிமகன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு மூலம் 2000 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+