விற்பனை நேரத்தை அதிகரித்தும் நோ யூஸ்.. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை சரசரவென சரிவு
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை கிடுகிடுவென குறைந்து விட்டது. நேற்று (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் மொத்தம் ரூ.98.5 கோடிக்கு கீழ் மதுவிற்பனை நடந்துள்ளது.
Recommended Video
41 நாட்களுக்கு மே 7ம் தேதி மதுக்கடைகள் தமிழகத்தில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அதிக அளவில் குடிமகன்கள் கூடினர். மே 7 மற்றும் மே 8 ஆகிய இரு நாட்களில் மட்டுமே மதுக்கடைகள் இயங்கியது. இரு நாளில் மட்டும் 290 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடைய உயர்நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகள் உச்ச நீதிமன்ற உத்தரவால் மே 16 தேதி திறக்கப்பட்டது. முதல் நாள் ரூ.163.5 கோடிக்கு மதுவிற்பனையாகியது. அடுத்த நாளான ஞாயிறு அன்று ரூ.133 கோடி மதுவிற்பனையானது.
இதனால் உற்சாகம் அடைந்த டாஸ்மாக் நிறுவனம் டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேரத்தை இரவு 7மணி வரை அதிகரித்தது. அதாவது கூடுதலாக 2 மணி நேரம் திறந்திருக்கும் என நீட்டித்துள்ளது.
ஆனால் இந்த அறிவிப்பின் படி மதுக்கடைகள் நேரம் நீட்டிக்கப்பட்ட போதிலும்
3வது நாள் ரூ.100 கோடிக்கு மட்டுமே மது விற்பனையானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நான்காவது நாளில் 94 கோடிக்கும், நேற்று ரூ.98.5 கோடிக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையானதாக கூறப்படுகிறது.
மதுவை தயாரிக்கும் ஆலைகள் குறைந்த அளவே மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளூர் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது.. எனினும் ஒட்டுமொத்தமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ளதால் டாஸ்மாக்கில் மதுபானங்கள விற்பனை 100 கோடிக்கும் கீழாக சரிந்துள்ளது. பல டாஸ்மாக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications