Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை - டாஸ்மாக் மேலாண் இயக்குநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகள் திறக்கப்பட்டிருந்தாலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக இன்று இரவு 9 மணி வரையிலும் நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

TASMAC Liquor Shops will not open tomorrow

மே 24-ந் தேதி முதல் பால், மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள் தவிர மளிகை கடைகள் ,இறைச்சி கடைகள் உள்ளிட்ட எந்த கடையும் ஒரு வாரத்துக்கு இயங்காது என அரசு அறிவித்துள்ளது. மருத்துவ காரணங்கள், இறப்புக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டங்களுக்குள் பயணிக்க இ பதிவு தேவையும் இல்லை. மேலும் இன்றும் நாளையும் வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.

TASMAC Liquor Shops will not open tomorrow

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்றும் நாளையும் திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்தால் குடிமகன்கள் பெரும் எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் கூடும் சாத்தியங்கள் உள்ளன; அதனால் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து இருக்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+