குடிகாரர்களுக்கு மீண்டும் ஷாக்.. மூடப்படும் டாஸ்மாக்! ’முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைக்கு ரெடியாகுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனவும், விதிகளை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையான எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மே 1, மற்றும் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 21, 22, 23 ஆகிய நாட்களில் டாஸ்மாக் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த முறை சுமார் 85 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியிருப்பதால், யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

TASMAC Shops Closed

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரே குரலில் கூறுகின்றன. முக ஸ்டாலின் தலைமையிலான திமுக 120க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக தரப்பில் ஒரு நம்பிக்கை காணப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 62 மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இந்த பணிகளை வெளிப்படையாகவும் சீராகவும் நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள், நுண் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதியுக்கும் தனித்தனி பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கடுமையாக செய்யப்பட்டுள்ளன. மும்மடங்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரும் புகைப்பட அடையாள அட்டையுடன் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக, இந்த முறை முதன்முறையாக கியூஆர் குறியீடு அடிப்படையிலான அனுமதி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களின் உள்ளே ஒவ்வொரு சுற்றுக்கும் தனித்தனி மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய தொகுதிகளில் கூடுதல் மேசைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கல்வி நிறுவனங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மேலும், பாதுகாப்பு பணிக்காக மாநில காவல்துறையுடன் மத்திய ஆயுதப்படை வீரர்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர். எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026, சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்திடும் நோக்கில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள்-2003, விதி 12 (2)-ன் படி உரிமம் பெற்று இயங்கி வரும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானம் (IMFL) சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும் (04.05.2026) திங்கள் கிழமை வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மூடப்பட்டிருக்கும்.

மேலும், (04.05.2026) திங்கள் கிழமை அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது என்றும், மேலும், அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+