தமிழகத்தில் நாளை 3 மணி நேரத்திற்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது
சென்னை: டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி நாளை 3 மணி நேர கடையடைப்பு நடத்தப்படுகிறது.
தமிழக மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) நிறுவனத்தை தமிழக அரசே நேரிடையாக கடந்த 22 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. 2003 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அரசே நேரிடையாக பணியாளர்களை தேர்வு செய்கிறது.
அந்த வகையில் சுமார் 20000 பேர் பணியாற்றி வருகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது 2026 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில் எல்.ஜி. சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் ஏற்கெனவே பல நாட்களாக நீடித்து வரும் நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஊழியர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்கள். சிலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகளில் வேலை செய்து வருகிறார்கள்.
எனினும் அவர்களுக்கு இதுவரை பணி பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகிறது. எப்போது வேலை இழக்க நேரிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளனர். குறைந்தபட்சம் 480 நாட்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்க சட்டங்கள் இருந்தும் அமல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அமைச்சர் போராட்ட குழுவின் தலைமையை அழைத்து பேசினார். இதில் 16 சங்கங்கள் கலந்து கொண்டன. அவர்களது கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி நல்ல முடிவுகளை தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாளை 9ஆம் தேதி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் முழுவதும் 3 மணி நேரம் அதாவது பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications