தங்கம், நகைகள்.. மருமகன் வீட்டு முன்பு மாமியார்.. மகளின் உடலுடன் சென்று எந்த தாயும் செய்யாத சம்பவம்
சென்னை: வரதட்சணை விவகாரம் இன்றைக்கு இந்தியா முழுவதுமே பெரிய சிக்கலாக இருக்கிறது. வரதட்சணை என்பது வாங்குவது குற்றம் என்றால்.. கொடுப்பதும் குற்றம் தான்... ஆனால் நடைமுறையில் இரண்டுமே எதார்த்தமாக இருக்கிறது. என்ன சட்டம் போட்டாலும், வரதட்சணை விவகாரத்தில் பெரிய மாற்றங்கள் வரவே இல்லை.. தெலுங்கானா மாநிலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்த நிலையில், விபத்தில் மனைவி காலமானார். இந்நிலையில் மகளின் உடலுடன் சென்று வரதட்சணையை கேட்டு தாய் போராடியுள்ளார்.
வரதட்சணை கேட்பதும், வாங்குவதும் குற்றம் என்பது சட்டத்தில் தான் இருக்கிறது.. நடைமுறையில் அப்படி இல்லை.. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்பட தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் வரதட்சணை என்பது மிக இயல்பான ஒன்றாக இருக்கிறது. வரதட்சணை கொடுக்காமல் யாரும் திருமணம் செய்வதே இல்லை.. அதாவது தாங்களாகவே முன்வந்து மகளுக்கு தேவையான வசதிகளைசெய்து தருவதுடன், தங்க நகை, வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை அளிக்கிறார்கள்..

ஆடம்பரம்
எத்தனை பவுன் நகை போட்டோம் என்பது இங்கே கவுரவமாக பார்க்கிறார்கள். பெருமைக்காக பலர் செய்கிறார்கள். மகளுக்கு சொத்தில் பங்கு உள்ளது என்கிற நிலையில், இருக்கும் எதார்த்தப்படி இல்லாமல், ஆடம்பரத்திற்காகவும், பந்தாவிற்காகவும் பலர் மகள்களின் வாழ்க்கையை பணயம் வைக்கிறார்கள். அதேநேரம் பொய்யான வரதட்சணை புகார்களும் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
தெலுங்கானாவில் சம்பவம்
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் நகரத்தை சேர்ந்தவர் சுரேஷ் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த 25 வயதாகும் லாவண்யா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. சுரேஷ் அந்த பகுதியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது லாவண்யாவின் பெற்றோர் அதிக அளவில் வரதட்சணை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கருத்துவேறுபாடு காரணமாக லாவண்யா கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்திருக்கிறார்.
மருமகன் வீட்டிற்கு சென்றார்
இதற்கிடையே லாவண்யா கடந்த ஜூலை 16-ந் தேதி தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி அவரது தந்தை இறந்தார். படுகாயம் அடைந்த லாவண்யா சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் கடந்த 24-ந் தேதி இறந்தார். பிரேத பாிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் மூலமாக லாவண்யாவின் கணவர் சுரேஷ் வீட்டுக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.
வரதட்சணையை திரும்ப கேட்டு போராட்டம்
திருமணத்தின்போது கொடுத்த வரதட்சணையை திரும்ப கொடுத்தால்தான் பிணத்தை எடுத்துச்செல்வோம் என்று கூறி லாவண்யாவின் தாயார், உறவினர்களுடன் போராட்டம் நடத்தினார். 2 நாட்களாக மகளின் உடலுடன் போராட்டம் நடத்திய தாயாரிடம், போலீசார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் மகளின் உடலை எடுத்துச்சென்று அவரது தாயார் இறுதிச்சடங்கு செய்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
வேலையில்லாத இளைஞர்கள் அதிரடி கைது.. இரவோடு இரவாக வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.. என்ன காரணம்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications