தமிழக அரசு கல்லூரிகளில் 1,311 பணியிடத்துக்கு தற்காலிக விரிவுரையாளர்கள்.. விரைவில் அறிவிப்பு
சென்னை: அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 1,311 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு முழுநேர 'தற்காலிக' விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தமிழக உயர் கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரிவுரையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .15,000 ஒருங்கிணைந்த ஊதியம் கிடைக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்ப கடந்த 2017ம் ஆண்டு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது பின்னாளில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து பல கல்லூரிகளில் விரைவுரையாளர்கள் பலர் ஓய்வு பெற்றதால் காலி பணியிடங்கள் அதிகரித்தது.

ஒப்புதல் அவசியம்
இந்த சூழலில் அனைத்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர்களை அனுமதிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ ( AICTE) இன் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ ( AICTE) இலிருந்து ஒப்புதலின் நீட்டிப்பை (EOA) பெறுவதற்கு, காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பதவிகளை அவ்வப்போது நிரப்புவது மிகவும் அவசியம், பொறியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1:25 ஆக இருக்க வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்கள்
ஆசிரிய மாணவர் விகிதத்தை கணக்கிடும் போது, AICTE, NBA, NACC இன் நிபுணர் குழு உறுப்பினர்கள் ஒரு மணிநேர அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கருத்தில் கொள்ளவில்லை. இருப்பினும், ஒருங்கிணைந்த ஊதியத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்கள், ஆசிரிய-மாணவர் விகிதத்தை கணக்கிடுவதை ஏற்கிறார்கள்.

1,311 பணியிடம்
எனவே, தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையம், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாதத்திற்கு ரூ .15,000 ஒருங்கிணைந்த ஊதியத்தில் 1,311 முழுநேர தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல் வழங்கியது
இதற்கான முன்மொழிவை ஆராய்ந்த தமிழக அரசு, காலியாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுவாரியத்தால் ஆட்கள் வரை, காலியிடங்களில் முழுநேர தற்காலிக ஆசிரியர்களை நிரப்பிக்கொள்ள ஒப்புதல் அளித்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 220 காலியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளித்தது. இதன்படி நியமிக்கப்படவுள்ள தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியத்திற்காக ரூ.25 கோடி நிதியும் அரசு ஒதுக்கி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications