தமிழக அரசு கல்லூரிகளில் 1,311 பணியிடத்துக்கு தற்காலிக விரிவுரையாளர்கள்.. விரைவில் அறிவிப்பு
சென்னை: அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 1,311 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு முழுநேர 'தற்காலிக' விரிவுரையாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தமிழக உயர் கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விரிவுரையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு ரூ .15,000 ஒருங்கிணைந்த ஊதியம் கிடைக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 பணியிடங்களை நிரப்ப கடந்த 2017ம் ஆண்டு தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது பின்னாளில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து பல கல்லூரிகளில் விரைவுரையாளர்கள் பலர் ஓய்வு பெற்றதால் காலி பணியிடங்கள் அதிகரித்தது.

ஒப்புதல் அவசியம்
இந்த சூழலில் அனைத்து பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் மாணவர்களை அனுமதிக்க ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ ( AICTE) இன் ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஏஐசிடிஇ ( AICTE) இலிருந்து ஒப்புதலின் நீட்டிப்பை (EOA) பெறுவதற்கு, காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பதவிகளை அவ்வப்போது நிரப்புவது மிகவும் அவசியம், பொறியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1:25 ஆக இருக்க வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்கள்
ஆசிரிய மாணவர் விகிதத்தை கணக்கிடும் போது, AICTE, NBA, NACC இன் நிபுணர் குழு உறுப்பினர்கள் ஒரு மணிநேர அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கருத்தில் கொள்ளவில்லை. இருப்பினும், ஒருங்கிணைந்த ஊதியத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை உறுப்பினர்கள், ஆசிரிய-மாணவர் விகிதத்தை கணக்கிடுவதை ஏற்கிறார்கள்.

1,311 பணியிடம்
எனவே, தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையம், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாதத்திற்கு ரூ .15,000 ஒருங்கிணைந்த ஊதியத்தில் 1,311 முழுநேர தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

ஒப்புதல் வழங்கியது
இதற்கான முன்மொழிவை ஆராய்ந்த தமிழக அரசு, காலியாக உள்ள அனைத்து பதவிகளுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுவாரியத்தால் ஆட்கள் வரை, காலியிடங்களில் முழுநேர தற்காலிக ஆசிரியர்களை நிரப்பிக்கொள்ள ஒப்புதல் அளித்தது. அரசு பொறியியல் கல்லூரிகளில் 220 காலியிடங்களை நிரப்பவும் ஒப்புதல் அளித்தது. இதன்படி நியமிக்கப்படவுள்ள தற்காலிக ஊழியர்களுக்கான ஊதியத்திற்காக ரூ.25 கோடி நிதியும் அரசு ஒதுக்கி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications