இன்று தைப்பூசம்: பழனி, திருச்செந்தூர், வடலூரில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்- சிறப்பு ரயில் சேவை!
சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகன் ஆலயங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வடலூர் வள்ளலார் ஞானசபையில் ஏழு திரைகளை நீக்கி காண்பிக்கப்படும் ஜோதி தரிசன வழிபாட்டுக்காகவும் பெருந்திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர். தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
முருகனின் பக்தர்கள் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர விழாக்களின் போது பாதயாத்திரையாக நடந்து காவடி சுமந்து முருகனை வழிபடுவது வழக்கம். தைப்பூச விழா இன்று நடைபெறுவதால் முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் முருக பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பழனியில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வரும் பக்தர்கள் யானைப்பாதை வழியாக குழு குழுவாக மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்; பின்னர் படிக்கட்டுகள் வழியாக இறங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பக்தர்களுக்காக படிக்கட்டுகள் பாதையில் அன்னதானங்களும் பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. பழனியில் தரிசன டிக்கெட்டுகள் அனைத்தும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
பழனி மலை அடிவாரத்தில் தற்காலிக வாகன நிறுத்தங்கள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம்கள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3,000-க்கும் அதிகமான போலீசார் பழனியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்ப்ட்டுள்ளன. பழனி மலை அடிவார கிரிவலப் பாதையில் பக்தர்கள் காவடி சுமந்து ஆட்டம் பாட்டத்துடன் மலையேறுவர் என்பதால் அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நெரிசல் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல திருச்செந்தூரிலும் கடல் அலைபோல திரண்டு வந்துள்ள பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
#WATCH | Tamil Nadu: Devotees throng Arulmigu Dhandayuthapani Swamy temple to celebrate Thaipusam festival in Dindigul pic.twitter.com/UyoBjwFpuB
— ANI (@ANI) February 10, 2025
வடலூர் வள்ளலார் ஞானசபையில் இன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த வண்ணத்திரைகளை நீக்கி நடைபெறும் ஜோதி தரிசனத்தை வழிபடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
மேலும் மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல விருத்தாசலத்தில் இருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications