அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது- தம்பிதுரை
Recommended Video

சென்னை: அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை மூக்கை நுழைப்பது தவறானது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவும் பாஜகவும் எந்தளவுக்கு இணக்கமாக இருந்ததோ அந்தளவுக்கு தற்போது எலியும் பூனையுமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அமைக்காது
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்கும் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்த போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என கூறியிருந்தார்.

விளக்கம்
இதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல என்று கூறினார். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜராகி விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

வாய்மூடி மௌனி
அவர் கூறுகையில் அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது. பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும் போது வாய்மூடி மௌனியாக இருக்க முடியாது.

சும்மா இருக்க முடியாது
எங்கள் கட்சி குறித்து கருத்து சொல்ல தமிழிசைக்கு யார் உரிமை கொடுத்தது? யார் குறை சொன்னாலும் என்னால் சும்மா இருக்க முடியாது என்றார் தம்பிதுரை.












Click it and Unblock the Notifications