முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை! தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுக! ஓயாத அன்சாரி!
சென்னை: வரும் 31ஆம் தேதி நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது;
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை சாதி, மத, வழக்கு பேதமின்றி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். முதல்வரின் பரிந்துரை குறித்து கவர்னர் இதில் எந்த முடிவும் எடுக்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இதற்கு வலிமையான ஒரு மாற்று என்பது அரசியல் சட்டம் சட்ட உறுப்பு எண் 161-வது அம்சமாகும்.

பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு, அமைச்சரவையில் அரசியல் சட்ட உறுப்பு எண் 161-ன் படி அன்றைய அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது போல ஒரு தீர்மானத்தை முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்திலும் நிறைவேற்றுங்கள் என்றும், இது உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெல்ல உதவும் என்றும் வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் எதிர்வரும் 31.10.2023 அன்று தமிழக அமைச்சரவை கூடுவதாக அறிவிப்பு வந்துள்ளது. அதில் தமிழ்நாட்டு நலனுக்காக பல்வேறு நல்ல முடிவுகள் எடுத்திட வாழ்த்துகிறோம். இத்தருணத்தில் 20 ஆண்டுகளை கடந்த சிறைவாசிகள் முன் விடுதலை விவகாரத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுகிறோம்.
சாதி, மத, வழக்கு பேதமின்றி, நாங்கள் சுட்டிக்காட்டும் 36 பேர் உட்பட, 20 ஆண்டுகளை கடந்த அனைவரையும் அரசியல் சட்ட உறுப்பு எண் 161-ன் கீழ் முன் விடுதலை செய்ய பரிந்துரைத்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உரிய முயற்சி எடுக்க வேண்டும் என அன்புடன் வலியுறுத்துகிறோம்.
இதுவே வலிமை மிக்கது என்பதால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறோம். இன்று NEET தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு கேட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மூ அவர்களை சந்தித்த தமிழக முதல்வர் அவர்கள், உணர்வுப்பூர்வமாக இவ்விவகாரத்தில் துரிதமாக முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டதை பார்த்தோம்.
அவரது உருக்கமான வேண்டுகோள் மனதை நெகிழச்செய்தது. அதே வார்த்தைகளில் மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்கள் எமது இக்கோரிக்கையையும் பரீசீலிக்க வேண்டும் என கோருகிறோம். மனிதாபிமானத்துடன்- திறந்த மனதுடன் எங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications