மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு... வேல்முருகன் விமர்சனம்
சென்னை: கொத்தடிமை முறையை புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு என்ற பெயரில் கொண்டுவந்து மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு புதிதாக கொண்டு வரும் புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நடைபயணம்
ஒன்றிய அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிந்தபோதும், இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவில்லை, ஒண்ட இடமில்லை. பிரதமர் நிவாரண நிதி, புதிரான பிரதமர் கருணை நிதி இருந்தும் சல்லிக்காசும் கிடைக்கவில்லை. சொந்த ஊரில் போய்ச் சாக வேண்டும் என்பதே அந்த நடைப்பயணத்தின் ஒரே குறிக்கோள் என்றால், இந்த நாட்டின் - தொழிலாளர்களின் அவலம் நமக்குப் புரியாமல் எப்படி?

44 தொழிலாளர் நலச் சட்டங்கள்
உழைப்புச் சுரண்டல் மேலும் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்காக நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 4 தொகுப்புகளைக் கொண்ட புதிய தொழிலாளர் நலச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதில் (1) ஊதியம் குறித்த தொகுப்பு, (2) தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, (3) பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, (4) சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு உள்ளது.

தொழிலாளிகளுக்கு வழிகாட்டுதல்
ஏற்கனவே உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளும், அவற்றைப் பின்பற்றத் தவறினால் தண்டனைகள் மற்றும் அபராதங்களும் உண்டு; சட்ட அமலாக்கம், தொழில்-தொழிலாளி பிரச்சனை குறித்த கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளும் உண்டு. அத்தனையையும் நீக்கிவிட்டு, தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதியை, தொழிலாளிக்கான வழிகாட்டுதல்கள் என மாற்றியுள்ளனர்.

வலியுறுத்தல்
குறைந்தபட்ச கூலி நிர்ணயம், பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், எட்டு மணி நேர வேலை, ஏன், தொழிற்சங்க உரிமையே கூட கிடையாது எனப் புதிய கொத்தடிமை முறையை, "புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு" என்ற பெயரில் கொண்டுவந்து இந்திய மக்களையே இளிச்சவாயர்களாகப் பார்க்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதைத் திரும்பப்பெற வலியுறுத்துமாறு தமிழக அரசைக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications