மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு... வேல்முருகன் விமர்சனம்
சென்னை: கொத்தடிமை முறையை புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு என்ற பெயரில் கொண்டுவந்து மக்களை இளிச்சவாயர்களாகப் பார்க்கிறது மத்திய அரசு என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு புதிதாக கொண்டு வரும் புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நடைபயணம்
ஒன்றிய அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிந்தபோதும், இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவில்லை, ஒண்ட இடமில்லை. பிரதமர் நிவாரண நிதி, புதிரான பிரதமர் கருணை நிதி இருந்தும் சல்லிக்காசும் கிடைக்கவில்லை. சொந்த ஊரில் போய்ச் சாக வேண்டும் என்பதே அந்த நடைப்பயணத்தின் ஒரே குறிக்கோள் என்றால், இந்த நாட்டின் - தொழிலாளர்களின் அவலம் நமக்குப் புரியாமல் எப்படி?

44 தொழிலாளர் நலச் சட்டங்கள்
உழைப்புச் சுரண்டல் மேலும் மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்காக நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 4 தொகுப்புகளைக் கொண்ட புதிய தொழிலாளர் நலச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. அதில் (1) ஊதியம் குறித்த தொகுப்பு, (2) தொழிற்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, (3) பணியிடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு, (4) சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு உள்ளது.

தொழிலாளிகளுக்கு வழிகாட்டுதல்
ஏற்கனவே உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிகளும், அவற்றைப் பின்பற்றத் தவறினால் தண்டனைகள் மற்றும் அபராதங்களும் உண்டு; சட்ட அமலாக்கம், தொழில்-தொழிலாளி பிரச்சனை குறித்த கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளும் உண்டு. அத்தனையையும் நீக்கிவிட்டு, தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதியை, தொழிலாளிக்கான வழிகாட்டுதல்கள் என மாற்றியுள்ளனர்.

வலியுறுத்தல்
குறைந்தபட்ச கூலி நிர்ணயம், பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், எட்டு மணி நேர வேலை, ஏன், தொழிற்சங்க உரிமையே கூட கிடையாது எனப் புதிய கொத்தடிமை முறையை, "புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு" என்ற பெயரில் கொண்டுவந்து இந்திய மக்களையே இளிச்சவாயர்களாகப் பார்க்கும் மோடி அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, இதைத் திரும்பப்பெற வலியுறுத்துமாறு தமிழக அரசைக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications