கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன்?- தங்கதமிழ்ச் செல்வன்
Recommended Video
சென்னை: கொள்கையே இல்லாத அமமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் இருந்து என்ன பயன் என தங்கதமிழ்ச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முதல் பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்தார்.

இதிலிருந்து தங்கதமிழ்ச் செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தினகரனை தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ வெளியானது.
இதைத் தொடர்ந்து நேற்று தினகரன் வீட்டில் தங்கதமிழ்ச் செல்வன் குறித்து தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் கட்சி குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த போதே அவரை அழைத்து எச்சரித்தேன்.
மேலும் இது தொடர்ந்தால் கட்சி மாவட்டச் செயலாளர் பதவி, கொள்கை பரப்பு செயலாளர் பதவி ஆகியவற்றை பறித்து கொள்வேன் என தினகரன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தங்கதமிழ்ச் செல்வன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளராக இருந்து என்ன பயன் என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications